லங்கா பிரீமியர் லீக் ரி-20 போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான
யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியில் முதலாவது போட்டியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இது பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலாவது ஓவரில் விக்கெட்டினை விழ்த்தியதுடன் 4 ஓவர்கள் பந்துவீசி அவர் 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
அவரது பந்தில் பாகிஸ்தான் வீரர் சொகைப் மலிக்கிடம் பிடிகொடுத்து கொழும்பு கிங்க்ஸ் அணியின் அஞ்சலோ மத்யூஸ் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வியாஸ்காந்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி சிங்கள ரசிகர்களும் புகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.