புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2020

தென்னிலங்கையில் நேற்று அடித்துத் துவைத்த தமிழன்!

www.pungudutivuswiss.com

லங்கா பிரீமியர் லீக் ரி-20 போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான

போட்டியில் 6 விக்கெட்டுக்களால் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியில் முதலாவது போட்டியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இது பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலாவது ஓவரில் விக்கெட்டினை விழ்த்தியதுடன் 4 ஓவர்கள் பந்துவீசி அவர் 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அவரது பந்தில் பாகிஸ்தான் வீரர் சொகைப் மலிக்கிடம் பிடிகொடுத்து கொழும்பு கிங்க்ஸ் அணியின் அஞ்சலோ மத்யூஸ் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வியாஸ்காந்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி சிங்கள ரசிகர்களும் புகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad