புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2022

பிரதமர் மகிந்தவின் 35 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த தனிப்பட்ட செயலாளர்!

www.pungudutivuswiss.com


பிரதமர் மகிந்த ராஜபக்சவின்  பெருந்தொகை நிதியை அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெருந்தொகை நிதியை அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மகிந்த ராஜபக்சவின் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவ்வப்பொழுது ஏடிஎம் அடையைப் பயன்படுத்தி, பணம் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 35 மில்லியன் ரூபா வரை பிரதமரின் கணக்கில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னரும் உதித லொகு பண்டார மகிந்த ராஜபக்சவின் செயலாளராக கடமையாற்றினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான W.J.M. N லொக்கு பண்டாரவின் மகன் உதித லொக்கு பண்டார கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad