கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது அதற்கு முன் கொரோனா தடுப்பூசி பெற்று, இதுவரை பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளாதவர்கள் இந்த விதியால் பாதிக்கப்பட இருக்கிறார்கள். அத்துடன், இன்னமும் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள், அதாவது, ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களையும் இந்த விதி பாதிக்கும். யாருக்கெல்லாம் விதிவிலக்கு? புதிய விதிகளின்படி, பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள், மற்றும் கடந்த மூன்று மாதங்களுக்குள் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஆகியோர், கொரோனா தொற்றுடைய ஒருவருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தால், அவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது. ஆனால், அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். இத்தகையோர் தனிமைப்படுத்தப்படும்போது, அவர்கள் இழந்த ஊதியத்துக்கு இழப்பீடு உண்டு. |