உடனடியாக, விமானிகள் விமானத்தைத் திருப்பி புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்கள். விமானிகள் பத்திரமாக விமானத்தைத் தரையிறக்கியதைத் தொடர்ந்து, அதில் பயணித்த 48 பயணிகளும் உயிர் பிழைத்துள்ளார்கள். ஆனாலும், அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஞ்சினில் தீப்பிடித்ததாக ஏர் பிரான்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். |