-
26 பிப்., 2025
பறக்காத விமானத்திற்கு மாதம் 9 இலட்சம் ரூபா வாடகை! [Wednesday 2025-02-26 06:00]
![]() ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாக விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிக்கு இந்நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என பிரதி நிதிஅமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார் |
உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே தீர்வு!- ஜெனிவாவில் விஜித ஹேரத். Top News [Wednesday 2025-02-26 06:00]
![]() சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார் |
25 பிப்., 2025
மாறி மாறி கொலை குற்றச்சாட்டு சுமத்திய எம்.பிக்கள்! [Tuesday 2025-02-25 16:00]
![]() ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று சபையில் சூடான வாதங்கள் வெடித்தன. |
குரங்கு பாய்ந்து விபத்து - பெண் பலி! [Tuesday 2025-02-25 16:00]
![]() புதுக்குடியிருப்பு-ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. |
கணேமுல்ல சஞ்சீவ கொலை - செவ்வந்தியின் தாயும் , தம்பியும் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்றி சஞ்சீவவை ஏன் அழைத்து வந்தீர்கள் என நீதிவான் கேட்க சூடு விழுந்தது! [Tuesday 2025-02-25 05:00]
![]() கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன. |
வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! உக்ரைன் நகரங்களை இலக்கு வைத்த ரஷ்ய ட்ரோன்கள்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்குத் தொடர்பு? [Tuesday 2025-02-25 05:00]
![]() கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார் |
இஷாரா செவ்வந்தி தொடர்பில் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
22 பிப்., 2025
அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை! [Friday 2025-02-21 16:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார் |
20 பிப்., 2025
காதை அறுத்துக் கொள்வதாக சவால் விட்ட எம்.பி! - நாக்கை அறுத்துக் கொள்ளுமாறு கூறிய அமைச்சர். [Thursday 2025-02-20 05:00]
![]() 2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, இந்த ஆண்டுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரச மேம்பாட்டு வங்கியை அரசாங்கத்தால் நிறுவ முடிந்தால், தனது காதை அறுத்துக் கொள்வேன் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் பாராளுமன்றத்தில் சவால் விடுத்தார் |
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை "சர்வாதிகாரி" என்று டிரம்ப் முத்திரை
ரயிலில் மோதிய யானைக்கூட்டம் - 05 யானைகள் உயிரிழப்பு ; மட்டக்களப்புக்கான ரெயில் சேவைகள் பாதிப்பு
19 பிப்., 2025
கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி? ------------------------------------------------------
18 பிப்., 2025
வடக்கிற்கான பட்ஜெட் - புகழ்ந்து தள்ளிய அர்ச்சுனா! [Tuesday 2025-02-18 06:00]
![]() இம்முறை வரவு செலவுத்திட்டத்தை நாம் வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமாவே கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார் |
ஏப்ரல் நடுப்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல்! [Tuesday 2025-02-18 06:00]
![]() ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும். அச்சமடையாது தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என்று சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். |
உள்ளூராட்சி தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 187 வாக்குகளுடன் நிறைவேறியது! [Tuesday 2025-02-18 06:00]
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களின்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்தவொரு வாக்கும் பயன்படுத்தப்படவில்லை. |
17 பிப்., 2025
076 944 9126, 071 564 97 53, 076 413 26 85, 074 149 75 54 இந்த எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் எச்சரிக்கை
உக்ரைனில் துருப்புக்களைக் களமிறக்கத் தயார் - பிரித்தானியப் பிரதமர்
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனின் பாதுகாப்பை
மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்த முன்னாள் போராளி! [Monday 2025-02-17 05:00]
![]() பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னாள் போராளி நேற்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். |
தமிழரசு தீர்வை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை! - என்கிறார் சுமந்திரன். [Monday 2025-02-17 05:00]
![]() நீங்கள் மக்களுக்காக வழங்குவதென வாக்குறுதி அளித்த உங்களிடத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்ற அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது முதலில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோருவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
இன்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி! [Monday 2025-02-17 05:00]
![]() சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். |
15 பிப்., 2025
தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம்! [Saturday 2025-02-15 05:00]
![]() உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் |
முள்ளிவாய்க்காலில் முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரதம்! Top News [Friday 2025-02-14 18:00]
![]() முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார் |
12 பிப்., 2025
குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம்! [Wednesday 2025-02-12 05:00]
![]() தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது |
11 பிப்., 2025
மாவையை சந்தித்தது உண்மை - சச்சரவில் ஈடுபடவில்லை என்கிறார் சி.வி.கே. [Tuesday 2025-02-11 05:00]
![]() மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார். |
7 பிப்., 2025
லசந்த கொலை சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்! [Thursday 2025-02-06 16:00]
![]() ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்கள் இணைந்து உயர் நீதிமன்ற வாயிலில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். |
6 பிப்., 2025
18,000 ஆயிரம் இந்தியர்களை ஒரேயடியாக ஏற்றி அனுப்பும் டொனால் ரம்.. மோடி முகத்தில் கரியை பூசினார் !
எம்.பிக்களுக்கு வாகனம் வழங்கப்படாது! [Thursday 2025-02-06 05:00]
![]() தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆளணியை அதிகரிக்க ஆளுநரிடம் கோரிக்கை! [Thursday 2025-02-06 05:00]
![]() யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார். |
ஊடக படுகொலை சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி தண்டிக்கப்பட வேண்டும்! [Thursday 2025-02-06 05:00]
![]() இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது |
புதிய அரசியலமைப்பு இப்போதைக்கு இல்லை - கைவிரித்தது அரசாங்கம்! [Thursday 2025-02-06 05:00]
![]() அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
5 பிப்., 2025
நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்த அர்ச்சுனா!- சூடாகிய சபாநாயகர். [Wednesday 2025-02-05 16:00]
![]() நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரைப் பார்த்து கடுமையாக சாடினார். நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் |
அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை- மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்! [Wednesday 2025-02-05 16:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். |
லசந்த படுகொலை சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை! [Wednesday 2025-02-05 16:00]
![]() த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளா |
சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க உத்தரவு! [Wednesday 2025-02-05 16:00]
![]() ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது |
சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்
யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனஅழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில்! [Wednesday 2025-02-05 05:00]
![]() எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இன அழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் என வேலன் சுவாமிகள் கடுமையாக சாடியுள்ளார்.யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். |
அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி- ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் இரகசிய டீல்! [Wednesday 2025-02-05 05:00]
![]() அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் |
3 பிப்., 2025
கனடா மற்றும் மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி! [Saturday 2025-02-01 16:00]
![]() கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்த கனடா! [Sunday 2025-02-02 17:00]
![]() அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் கனடா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கு பதிலடியாக இவ்வாறு கனடாவும் வரி விதிப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், பான வகைகள் தளபாடங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்! Top News [Sunday 2025-02-02 17:00]
![]() தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது |