இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் நிகழ்ச்சி நடக்கும்! - அமைப்பாளர்கள் உறுதி
நவம்பர் மூன்றாம் தேதி நடக்க இருக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களான ட்ரினி ஈவண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.