புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012

தென்னிந்தியத் திரைப்படத்துறையின் பலம் ஈழத்தமிழர்களின் கைகளிலும் தங்கியிருக்கின்றது: - இளையராஜா..(காணொளி)
நான் இத்தடவை கனடா வருவதற்கு இங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களே காரணமாக உள்ளார்கள். அவர்களை நான் என்றும் மதிக்கின்றேன். முக்கியமாக தென்னிந்தியத் திரைப்படத்துறையானது தற்காலத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக இருப்பதற்கும் அங்கு தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்கள் உலகளவில் வெற்றி பெறுவதற்கும் காரணமாகத் திகழ்பவர்களில் ஈழத்தமிழர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை நான் நன்கு உணர்கின்றேன்.
 


குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படத்துறையின் பலம் உங்களைப் போன்ற ஈழத்தமிழர்களின் கைகளிலும் தங்கியிருக்கின்றது என்று நான் துணிந்து கூறுவேன்"
 
இவ்வாறு நேற்று புதன்கிழமை ரொரென்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய "இசைஞானி" இளையராஜா செய்தியாளரிடம் தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் நவம்பர் மாதம்; 3ம் திகதி ரொரொன்ரோவில் நடைபெறவுள்ள மாபெரும் இசைவிழாவில் சுமார் 100 இசைக் கலைஞர்களோடு கலந்து கொள்வதை உறுதிப்படுத்தும் முகமாக வியாழக்கிழமை ஸகாபுறோ நகரில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் மற்றும் வர்த்தக நண்பர்கள்; சந்திப்பில் கலந்துகொள்ளும் முகமாக கனடா வந்துள்ள இசைஞானி இளையராஜா விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் மனந்திறந்து பேசினார். மிகவும் உற்சாகமாக காணப்பட்ட அவரை நவம்பர்மதத ரொரென்ரோ இசைவிழாவின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் மாலை அணிவித்து கௌரவித்தார்.
 

ad

ad