என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இராணுவப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட நாடகம்: சிறீதரன் எம்.பி
கிளிநொச்சியில் எனது அலுவலகம் சோதனையிடப்பட்ட சம்பவமும், அதன் பின்னர் எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் இராணுவப் புலனாய்வாளர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உலக வழக்கத்திற்கு மாறாக அப்பாவி யுவதிகளின் குடும்ப வறுமையினை முன்னிறுத்தி ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டமையினை கண்டித்தமைக்காக பழிவாங்கும் வகையிலேயே இந்த நாடகத்தை படையினர் அரங்கேற்றுகின்றனர்.