புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு! ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதம்!

 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் பட தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் துவங்கியது. ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் வழக்கறிஞர்களிடம்விசாரணை மேற்கொண்டார்.
விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பதால் இரு மாநி

ல அரசுகளும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தடையை நீக்கும்படி கமலஹாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீது கடந்த 
24-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. 26-ந்தேதி நீதிபதி வெங்கட்ராமன் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். 28.01.2013 திங்கள்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சம்பந்தப்பட்டவர்களுடன் கமலஹாசன் பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என்று 
நீதிபதி அறிவுரை வழங்கினார். தீர்ப்பை இன்று தள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று விசாரணை நடக்கிறது.
விசாரணையின் போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன்,விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

ad

ad