உபகுழுவின் நகல் இடைக்கால அறிக்கையாகாது
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான ‘கோப்’ குழு அறிக்கை என்னும் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர வெறும் நகலையே ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.கோப் குழுவிற்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படாத மேற்படி கோப் உப குழுவின் நகல் செல்லுபடியற்றதெனவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் கோப் குழுவின் தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர, நகலொன்றினை கோப் குழுவின் அறிக்கையென ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதன் மூலம் டியு