புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

தேர்தலில் வாக்களிப்பை குறைக்க இலங்கை இராணுவம் தயாராகி வருகின்றது- சீ.வி.விக்னேஸ்வரன் 
நடைபெறுவுள்ள தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த இலங்கை இராணுவமும் அரசாங்க தரப்பினரும் தயாராகி வருகின்றனர் எனவும், அரசாங்க தரப்பு வாக்கு மோசடிகளிலும் ஈடுபட வாய்ப்புள்ளது. என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில்


அரசாங்கத்திற்கு அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்கிற ஒரு துரோகச் செயல்!- முழங்காவில் தேர்தல் பிரசாரத்தில் சுமந்திரன் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் முழங்காவில் பகுதியில் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டப் பொருளாளர் தனராஜின் தலைமையில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00 மணிக்கு நிறைவு பெற்றது.
ஐ.நா அறிக்கை விடுதலைப் புலிகளை சாதாரண அமைப்பு என்றே குறிப்பிட்டுள்ளது: குமுறும் அமைச்சர் பீரிஸ்
பாதுகாப்பு தரப்பினர் குறித்து மக்கள் சாட்சியங்களை வழங்கிய போதும், அது தொடர்பாக ஒரு நல்லெண்ண வார்த்தை ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இராணுவத்தினர் விசாரணைக்கென 1990ல் அழைத்து சென்ற 174 இளைஞர் பற்றி இன்றுவரை எந்த தகவலுமில்லை!- சீ யோகேஸ்வரன்
மட்டு. வந்தாறுமூலை பல்கலைக்கழக முகாமில் 1990ல் தஞ்சமடைந்த 174 இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் 23 வருடங்கள் கடந்தும்
இணையதளத்தில் சல்மான்கானுடன் நெருக்கமாக இருப்பதுபோல் காட்சி: ஐஸ்வர்யா அதிர்ச்சி: அபிஷேக் அப்செட்
ஐஸ்வர்யாராய்- சல்மான்கான் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் திடீர் என்று பரவியுள்ளன. இவற்றை வெளியிட்டது யார்



               ""ஹலோ தலைவரே...… சொத் துக் குவிப்பு வழக்கில் ஏற்படுற திருப்பங்களால் ஜெ. உக்கிரம்னு நம்ம நக்கீரனில் தெளிவா எழுதியிருந்தாங்க. அந்த உக்கிரத்தோட விளைவுதான் அந்த அரெஸ்ட்டாம்


           நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் வலை வீசி வரும் நிலையில், கட்சியின் மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்தார் விஜயகாந்த். பரபரப்பாகவும் காரசார விவாதங்களுட னும் நடந்து முடிந்திருக்கிறது செயற்குழு



               பெண் பிள்ளைகள் மீதான வல்லுறவுக் கொடுமை வரிசையில், இன்னுமொரு சம்பவம்! அசராம் பாப்பு என்கிற 72 வயது சாமியார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிப் பிள்ளையைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.  நக்கீரன் 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலில் ஆசிரமம் ஒன்றைத் தொடங்கிய அசராம், இப்போது 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரமங்களைக் கொண்ட, உலகப் பிரபலமான சாமியாராக வலம்வருகிறார். தன் ஆசிரமங் களுடன், பழங்காலத்தைப் போன்ற குருகுலங்கள், மருந்து நிறுவனங்கள் என பலவற்றையும் நடத்து கிறார்.  இதில், மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள குருகுலமும் அடக்கம். இந்த குரு குலத்தில் 12வது படிக்கும் உத்தரப் பிரதேச மாணவி ஒருவரைத்தான், அசராம் பலாத்காரம் செய்துள்ளார். 

கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில், அந்த மாணவிக்கு தொடர்ந்து சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் குருகுலத்துக்கு விரைந்தனர்.  அவர்களிடம், வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு மாணவி கூறியிருக்கிறார். ஆனால், சாமியாரிடம் அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என ஆசிரமத்தில் உள்ளவர்கள் கூற, பெற்றவர்களும் பக்தி சிரத்தையோடு, தலையாட்டி உள்ளனர். 
""மாணவியிடம் சில கெட்ட ஆவிகள் புகுந்துள்ளதாகவும் பேயோட்டி, சிறப்புப் பூஜை செய்தால் சரியாகிவிடும் எனவும் ஆசிரம சேவாதார் கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த சமயம், ராஜஸ் தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்த இருந்த சாமியார், அங்கு வருமாறு கூறியுள்ளார்.  அதைக் கேட்டு ஜோத்பூர், மனாய் ஆசிரமத்துக்குப் போனார் கள்.  ஆக.15-ம் தேதியன்று,  அங்குவைத்துதான் அந்தச் சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார்'' என்கிறார்கள் ஜோத்பூர் போலீஸார். 

முதலில், இந்தப் புகாரை போலீசார் நம்பவில்லை. மாணவியின் பெற்றோர்கள் அசராம் பாப்பு ஆசிரமத்தின் தீவிர பக்தர்கள் என்பதை அறிந்தபின் தான், போலீசின் விசாரணை சரியான திசைக்கு நகர்ந்தது. 

ஏற்கனவே, சாமியார் மீது ரூ.700 கோடி நிலப்பறிப்பு, 2 ஆசிரம சிறுவர்கள் கொலை என பல வழக்குகள், தாந்திரீக மோசடி என பல பிரச்சினைகள் உள்ளன. 

"ஜோத்பூரில் இருந்து ஆக.11-ம் தேதியே, சாமியார் கிளம்பிவிட்டார்' என்று ஆசிரமத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்கடே என்பவர் சொல்ல... ஆசிரமம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் ரஞ்சித் தேவ் ராவோ, "10, 11 தேதிகளில் நடந்த- தீட்சை அளிக்கும் சத்சங் நிகழ்ச்சிக்காக, ஆக.9-ம் தேதியே வந்துவிட்டார். சத்சங் நிகழ்ச்சி முடிந்தபிறகு, பெரும்பாலும் தனியாகவே இருந்தார்.  தீவிரமான பக்தர் களைக்கூட அவருடைய முக்கிய அறைக்கு அனுமதிக்கவில்லை. அதேநேரம், குறிப் பிட்ட சில பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தார். 16-ம் தேதி காலையில்தான் இங்கிருந்து கிளம்பினார்'’என்று போட்டு டைத்தார். 

ஆனால், "72 வயதான எனக்கு, ஆண்மையே போய்விட்டது...  அந்தச் சிறுமி என் மகளைப் போன்றவள்.. தயவு செய்து, அவளை வல்லுறவுக்குள்ளாக்கப் பட்ட சிறுமி எனக் கூறாதீர்கள்.. தூய்மை யானவள்' எனப் பலவாறாக விரிவுரை செய்தார். பத்தாயிரக்கணக்கான பக்தர் களைக் கட்டிப்போட்ட அவரது பிரசங்கம், எடுபடாமல் போனது. 

30-ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு, அசராம் பாப்புவுக்கு ஜோத்பூர் நகர போலீசார் உத்தரவிட, பாப்பு, எஸ்கேப். 14 பேரைக் கொண்ட ராஜஸ்தான் போலீஸ் தனிப்படை, பாப்பு சேஸிங்கை முடுக்கிவிட்டது. இந்தூரில் உள்ள ஆசிரமத்துக்குள்தான் சாமியார் ஒளிந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அங்கு ஆஜரானது, தனிப்படை. 

வேறு வழியின்றி, பாப்புவின் மகனான சின்ன சாமியார், நாராயண் சாய், "பாப்புஜிக்கு உடல்நலம் சரியில்லை. அவர் சரியானதும், ராஜஸ்தான் போலீசார், எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து விசாரிக்கலாம்' என்று சொல்லிப் பார்த்தார். 

கடந்த 31-ம் தேதி சனிக்கிழமை மாலையில், போலீஸை உள்ளே போகவிடாமல் தடுப்பு அரண் அமைத்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களைக் கடந்து உள்ளே சென்றது, ஜோத்பூர் போலீஸ் தனிப்படை. 

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்ட போலீசாரிடம், "இப்போதைக்கு நான் ஓய்வெடுக்க வேண்டும்' என தனி அறைக்குள் போய்விட்டார்.  சிறிது நேரத்தில் அவராகவே வெளிவந்த போது, பிடிக்குள் கொண்டுவந்தனர், ஜோத்பூர் போலீசார். 

அங்கிருந்து அசராமைக் கொண்டு வருவதற்குள், தனிப்படை போலீசார் தவித்துப் போனார்கள்.  இந்தூரில் இருந்து கிளம்பும் முன்பே, அவருக்கு நெஞ்சுவலி (அந்த ஊர்லயுமா) வந்துவிட்டது.  உடனே, இந்தூர் மருத்துவக் கல்லூரி  நிபுணர் குழுவினர் வந்து, நார்மல்தான் என உறுதிப்படுத்தி, அங்கிருந்து  விமானம் கிளம்ப, மறுநாள் காலை ஆகிவிட்டது. 

டெல்லியில், கடந்த நவம்பரில் மருத்துவ மாணவி வல்லுறவுக் கொடுமையைக் கண் டித்து எந்த இடம் போர்க்களமாக்கப் பட்டதோ, அதே ஜந்தர்மந்தர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, அசராமுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்! 

ஆனால், ஜோத்பூரில் அசராம் தரையிறங்கியபோது, காட்சி வேறு மாதிரியாக இருந்தது. பெண்ணுரிமையாளர் கள் ஒரு பக்கம் கருப்புக் கொடிகளுடன் ஆவேசத்துடன் போராட, பக்தகோடிகள் ஒதுங்க வேண்டியதாயிற்று. 

விறுவிறுப்பாக முடிந் தவைகளைத் தொடர்ந்து, பாப்புவுக்கு ஜோத்பூரில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.  அவருடைய ஸ்டேட்மெண்ட்டுக்கு அப்படியே திருப்பிப் போட்டதுபோல, வந்தது, பரி சோதனை முடிவு. 

அகில இந்திய அளவில் இது ஒரு பக்கம் நடக்க, பாலியல் சாமியார் நித்யானந்தாவுக்கும் பாப்புஜிக்கும் இடையிலான நட்புதான், இதில் மேட்டரே என்கிறது, ஆசிரமத் தரப்புகள். முன்பு, நித்தி கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, ஆதரவுக் குரல் கொடுத்து, வடக்கில் உள்ள சாமியார்களைக் கிளப்பி விட்டதில், பாப்புவுக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. அதேபோல, இப்போது பாப்பு மாட்டிக்கொண்டதும், இந்த வகையறா சாமியார்களைத் திரட்டி, போலீஸ் நட வடிக்கைகளை எதிர்கொள்ள உதவுவதில் இறங்கியுள்ளதாம், நித்தி தரப்பு. 
 பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? இணக்க அரசியல் வாதிகளுக்கு சவால் விடுகிறார் சம்பந்தன் 
தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்படு வதையும் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் தடுத்து, தமிழ் மக்களிடமிருந்து பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ள
முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய சமஸ்டியே வேண்டும் தீர்வாக; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு 
முஸ்லிம் மக்களும் ஏற்கக் கூடிய சமஷ்டித் தீர்வே தமிழர்களுக்குத் தேவை என்று நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டோரை சோனியா பாதுகாப்பதாக,
பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு: பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில்
நாங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனம்! இதற்கு ஐ.நாவும் உடந்தையாக இருந்ததுதான் வேதனைக்குரிய விடயம்: அனந்தி
நாம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வேளை ஐ.நா பார்வையாளராய் பார்த்ததை எம்மால் ஏற்கமுடியாது என அனந்தி லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

நவநீதம்பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்த ஆளும் கட்சி அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த 6 விடயங்கள் தொடர்பில் அவருக்கு பாராட்டு கூறுவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நல்லூரில் மலர் சொரிந்த ஹெலிகொப்டர் காற்றாடி பட்டு மரக்கிளை முறிந்து வீழ்ந்து பக்தர் படுகாயம்
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் மலர் சொரிந்த ஹெலியின் காற்றாடி பட்டு மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமையாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு விமானநிலைய புலனாய்வாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்!முக்கியமாக சுவிஸ் , கனடா ,பிரிட்டிஷ் கடவுசீட்டை  பெற்றுள்ள தமிழர்கள் மீது சந்தேகம் 
வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் புலனாய்வு (The State Intelligence Service (SIS) officers at the BIA)  அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும், எனினும் அவர்கள் வேறு முகவரியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகைக்கான (immigration arrival card)  அட்டையில் பதியப்படும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புலனாய்வுப்பிரிவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் கொடுக்கும் முகவரியிலா தங்கியிருக்கிறார்கள் என ஒப்பிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாக்களிக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதும், இரட்டைக் குடியுரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிப்பதற்குமே இந்த புதிய நடைமுறை என தெரிய வருகிறது.
நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் சித்திவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து விசாரணை தேவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்களை இலங்கைப் படையினர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக வெளியான குற்றச்சாட்டு
'இலங்கை படுகொலைகளின் மண்’ தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை-விகடன் 
குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.


யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் பலி - தப்பியோடிய சாரதி கைது
யாழ்ப்பாணம் பலாலி வீதியின் கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
France

வாழ்வின் இனிய தருணங்கள் அனைவருக்கும் எளிதில் அமைவதில்லை…

வயதுவேறுபாடின்றி பார்த்தவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்…

எமக்கான முத்திரையுடன் உலகெங்கும் வெற்றிநடைபோடுகிறது…

இந்த அரிய சந்தர்ப்பத்ததை தவறவிடாதீர்கள்… பின்னர் கவலையடையாதீர்கள்…

Maaru Thadam in France...
15.09.2013 pm 19.30 in France
MEGA CCR EPINAY SUR SEINE


ad

ad