புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

இணையதளத்தில் சல்மான்கானுடன் நெருக்கமாக இருப்பதுபோல் காட்சி: ஐஸ்வர்யா அதிர்ச்சி: அபிஷேக் அப்செட்
ஐஸ்வர்யாராய்- சல்மான்கான் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் திடீர் என்று பரவியுள்ளன. இவற்றை வெளியிட்டது யார்
என தெரியவில்லை. இதனால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகியுள்ளார்.

ஐஸ்வர்யாராயும் சல்மான்கானும் பழைய காதலர்கள். இருவரும் ‘ஹம்தில் சுகேசனம்’ படத்தில் காதலர்களாகவே நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. ஐஸ்வர்யா மீது சல்மான் தீவிரமாக காதல் கொண்டிருந்தார். அவருக்காக சில ஹீரோக்களிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். சல்மான்கான் இரவு நேரங்களில் ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு சென்று கதவை தட்டி தகராறு செய்ததெல்லாம் அப்போது செய்திகளாக வெளிவந்தன. பிறகு ஐஸ்வர்யாராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தார்.
மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன் ஆறுதல் வார்த்தைகள் கூறி வந்தார். இதில் இருவரும் நெருக்கமாகி காதல் வயப்பட்டார்கள். பின்னர் திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. 
இந்நிலையில் சமீபத்தில் இணையதளங்களில் ஐஸ்வர்யாராய் & சல்மான்கான் அரைகுறை ஆடையுடன் நெருக்கமாக இருக்கும் பழைய புகைப்படங்கள் இப்போது வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே பெட்டில் ஐஸ்வர்யாவுடன் சல்மான் நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியும், ஐஸ்வர்யா கழுத்தில் சல்மான் முத்தமிடுவதுபோன்ற ஸ்டில்களும் வெளியாகி உள்ளது. இதனால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகியுள்ளார். 
இதனால் அபிஷேக் பச்சனும் அப்செட் ஆகிருயிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவித்தது.

ad

ad