இணையத்தளங்களை ஊடறுக்க மென்பொருள் வழங்கிய நபர் கைது
மருசிறா என்ற பெயரில் இயங்கிய இணையத் தளத்தின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இணையத் தளங்களை ஊடறுப்பதற்கு தேவையான மென்பொருட்கள் மற்றும் அதற்கான கடவுச் சொற்கள் ஆகியனவற்றை குறித்த நபர் வழங்கியுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த கயான் ரொசான் சில்வா என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் பற்றிய தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரவினர், புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடறுக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்ட இணையத் தளங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட உள்ளன.
குறித்த இளைஞரின் இணைய தளத்திற்குள் பிரவேசித்த இளைஞர்கள் கடவுச் சொற்களையும் மென்பொருளையும் கொள்வனவு செய்து இணையத் தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.