புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013


பாலியல் குற்றச்சாட்டு!- காத்தான்குடி நகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றில் சரணடைந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீரை எதிர்வரும் மே 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியொருவரை காரில் அழைத்துச்சென்று ஏப்ரல் 22ம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட உறுப்பினரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்த குறித்த உறுப்பினர் இன்று சட்டத்தரணி மூலம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், எதிர்வரும் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி காத்தான்குடி நகர சபை உறுப்பினாரில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ்வினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad