புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


தெரிவுக்குழுவுக்குச் சென்றால் ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம்!- செல்வம் எம்.பி.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் சென்றால், ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அதனூடாக தீர்வை எட்டுகின்ற போது அதனை நாடாளுமன்ற தெரிவு குழுவுக்கு போட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுமானால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயார் என தெரிவித்திருந்தோம்.
அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமே தவிர, நாடாளுமன்ற தெரிவுக்குழுவூடாக எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
ஏனெனில் கடந்த கால தெரிவுக்குழுக்களை பார்க்கின்ற போது அவை அனைத்தும் குப்பைத்தொட்டியில் போடப்பட்ட விடயங்களாகவேயுள்ளது. அதனாலேயே சர்வதேசத்தின் நடுநிலைமையை நாம் நோக்கி நிற்கின்றோம்.
தெரிவுக்குழுவால் சொல்லப்படுகின்ற விடயங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆகவே எங்கள் கண் முன் நிறையவே அனுபவங்கள் உள்ளது.
இவ்வாறு இருக்கையில் நாம் தெரிவுக்குழுவுக்கு போவோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு இன்னும் பின்னோக்கி சென்று எமது இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற கோசம் அல்லது அவ் விடயங்கள் எடுபடாமல் போய்விடும் நிலைக்கு சென்றுவிடுவோம்.
தெரிவுக்குழு மூலமாக எம்மை படுகுழிக்குள் தள்ளிவிடும் செயற்பாட்டையே இந்த அரசாங்கம் செய்ய பார்க்கின்றது. ஆகவே கடைசி வரை தெரிவுக்குழுவுக்கு நாம் செல்லப்போவதில்லை.
இதேவேளை தமிழ் தேசியக்  கூட்டமைப்பு எக்காலத்திலும் எமது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாட்டில் ஈடுபடாது என்பதுடன் தெரிவுக்குழு மூலம் தீர்வு கிடைக்கும் என்பதனையும் நம்பவில்லை என தெரிவித்தார்

ad

ad