புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014

news
 பல்கலை. மாணவி கொலை : பதற்றத்தில் மாணவர்கள் எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நியாகம தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
யுவதியுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவரிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
 
இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கட்புல ஆற்றுகை கலைத் துறையின் இரண்டாம் வருட மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 யுவதியின் கொலை  தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 


ad

ad