பல்கலை. மாணவி கொலை : பதற்றத்தில் மாணவர்கள் எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியாகம தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யுவதியுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவரிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கட்புல ஆற்றுகை கலைத் துறையின் இரண்டாம் வருட மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
யுவதியின் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.