இலங்கையிலும் புதிய விண்கல் பொழிவு நாளை
புதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை நேரப்படி நாளை பகல் 1 மணிக்கு விண்கல் பொழிவு இடம்பெறவுள்ளதாகவும் அதனை இலங்கை வாழ் மக்கள் கண்டுகளிப்பது கடினம் என்ற போதும் அமெரிக்கா மற்றும் கனேடிய வாழ் மக்கள் நன்கு அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
´கெமலோபாடலிடிஸ்´ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பொழிவு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்