புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014


கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலரையும் மாவட்ட வாரியாக சந்திக்கும் ஸ்டாலின், காஞ்சி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, ""இந்த மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசனுக்கு வேறு தொழில்கள் எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க கட்சி வேலைதான் பார்க்கிறார். இவர்தான் மா.செக்களிலேயே சிறந்த மா.செ.'' என்று பாராட்டினார். ஸ்டாலின் இப்படிப் பேசிச் சென்றபிறகு உட்கட்சித் தேர்தலில் எஸ்.டி. உக்கம்சந்த், அண்ணா காலத்து அரசியல் வாதியான சி.வி.எம்.அண்ணாமலை குடும்பத்தார் இவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டாராம் அன்பரசன். இவர்களைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தலைமைக்கு ஏராளமான புகார்களை அனுப்ப, இத்தனை புகார்களா என தா.மோ.அன்பரசனை நேரில் வரச்சொல்லி விசாரித்துள்ளார் கலைஞர்.

புகார்கள் பற்றியும் முக்கிய பிர முகர்களையே ஓரங்கட்டியது பற்றியும் கலைஞர் விசாரிக்க, "அதுதான் தேர்தல்னு அறிவிச் சாச்சே... முடிஞ்சா அவங்க நின்னு ஜெயிக்கட்டும்' எனப் பதில் சொல்லியிருக்கிறார் தா.மோ.அன்பரசன். டென்ஷனான கலைஞர், "உள்கட்சித் தேர்தல் பற்றி என்கிட்டேயே சொல்றீயா? எந்த தைரியத்தில் இப்படிப்பட்ட பேச்சு வருதுன்னு எனக்குத் தெரியும்'ன்னு குரலை உயர்த்தியுள்ளார். ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதில் தா.மோ.அன்பரசனும் முன்னிற்கும் நிலையில், கலைஞர் காட்டிய கோபத்தால் எதிர்பார்ப்புகள் நொறுங்கிப்போக... ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். அதை டி.கே.எஸ். இளங்கோவனிடம் கொடுத்த கலைஞர், "பத்திரமா இருக்கட்டும். பேராசிரியர் வந்ததும் பேசிக்கலாம்' என்று சொல்லிவிட்டார். கல்யாணசுந்தரத்தின் கடிதம் போல அன்பரசின் கடிதம் வெளி யிடப்படவில்லை. எனினும் பத்திரிகைகளில் இது பற்றிய செய்திகள் கசிந்து கொண்டிருந்த நிலையில்தான்... ஸ்டாலின் தரப்பிலிருந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் வெளிப்பாடுதான் மு.க.ஸ்டாலினின் அறிக்கை. அதில், "தலைவருக்கும், எனக்கும், கழக முன்னணியினருக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்கு கூறிக் கொள்வேன் -ஆப்பசைத்த குரங்கின் நிலைதான் பின்னர் உங்கள் நிலையும் ஆகும் என்பதை உணர்வீர்! சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்' என்று கூறியுள்ளார்.

மீடியாக்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந் தவர் முரசொலி செல்வம். அவர்தான் இந்த அறிக் கையின் பின்னணியில் இருந்திருக்கிறார் என்கிறது தி.மு.க தரப்பு. அறிக்கையைப் பார்த்த தொண்டர்களோ, "இது மீடியாக்களுக்கு மட்டுமல்ல, கட்சிக்குள்ளேயே இருக்கும் சிலருக்கும் பொருந்தும். எதிரியோடு மோதாமல் நமக்குள்ளேயே மோதி கட்சியை பலவீனமாக்கிக் கொண்டிருப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்டாலின் செயல்பட்டிருக்கிறார்' என நிம்மதியடைகிறார்கள்.

-நமது நிருபர்

ad

ad