புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

மர்மமான முறையில் கொலை செய்து புதைக்கப்பட்ட ஆசிரியை: பசறையில் சம்பவம்
பசறை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியை ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்து பசறை மீதும்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கோயில்
ஒன்றுக்கு எதிரில் புதைத்த சம்பவம் குறித்து பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக ஆசிரியையின் சடலம் நாளைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த ஆசிரியை வீடு திரும்பவில்லை என ஆசிரியையின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் ஆசிரியை கொலை செய்யப்பட்டு குறித்த கோயிலுக்கு எதிரில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
சடலத்தை நேற்று தோண்ட பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் சட்ட வைத்திய அதிகாரியின் உதவியை பெற முடியாத காரணத்தினால் நாளைய தினம் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ad

ad