விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் எதிர்வரும் 13ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு அப்பால்
100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
இந்த மையத்தின் விஞ்ஞானி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,
இந்த மர்மப்பொருள், ஆழ்கடல் பகுதியிலேயே விழும் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த மர்மப் பொருள் விழப் போகும் சரியான இடத்தை இப்போது கூற முடியாது. அது பூமியில் விழுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், விழப்போகும் சரியான இடத்தை உறுதிப்படுத்த முடியும்.
அது நிலத்தில் விழுமென்றால் மட்டுமே, அச்சம் கொள்ள வேண்டும். புவி சுற்றுப்பாதைக்குள் அது நுழையும் போது எரியத் தொடங்கும். எரியும் துண்டுகள் நிலத்தில் விழுமாக இருந்தால் அது ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும் 13ஆம் திகதி ஜி.எம்.ரி. நேரப்படி காலை 6.15 மணியளவில், இந்த மர்மப்பொருள், இலங்கைக்கு தெற்கே 65 கடல் மைல் தொலைவில் கடலில் விழும் என்று வானியல் நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருட்கள் வரும்வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடும். ஆனால், இந்த பொருள் எரியாமல் நேரடியாக பூமியின் மேற்பரப்பில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளை 2013இல் முதன்முதலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதன் பின் விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது, எதிர்வரும் 13ஆம் திகதி காலை 11.45 மணிக்கு இந்தியப்பெருங்கடலில் இலங்கையின் தென் பகுதியில் 65 கி.மீ., தொலைவில் கடலில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது சிறிய அளவே இருப்பதால் பாதிப்பு அரிதாகத் தான் இருக்கும். உலகம் அழிய வாய்ப்பு இல்லை. பூமி மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளதால், கடலில் எங்கு விழுந்தாலும் பாதிப்பு ஒன்றுமில்லை.
விண்வெளியில் சுற்றி வரும் இம்மாதிரியான மர்மப் பொருட்கள் பற்றிய முழுமையான விபரத்தை கண்டறிவது மிகவும் கடினம்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) வெளியிட்டுள்ள அறிக்கை யில், 'விண்வெளியில் நுாற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் ஏவப்பட்டு சுற்றி வருகின்றன.
இதில், காலாவதியான செயற்கைக்கோள் கள் செயல்பாட்டிலுள்ள செயற்கைக்கோள்களுடன் மோதுதல் உள்ளிட்ட காரணங்களால் விண்வெளி குப்பைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இவை மணிக்கு 28,100 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. அதுவும் 5 இலட்சம் பொருட்கள் இந்த மாதிரி விண்வெளியில் உள்ளன.
செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று மோதுவதை தடுப்பது கடினமான பணி யாக உள்ளது. தற்போது விண்வெளி குப்பை களை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங் கவுள்ளோம் என நாசா குறிப்பிட்டுள்ளது.