புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

எம்.கே.நாராயணனைத் தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு




சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்கால நிலை குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் மீது அந்த அரங்கில் பார்வையாளராக வந்திருந்த பிரபாகரன் என்பவர், தனது காலணியால் பலமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

அப்போது பேசிய பிரபாகரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து இதுவரை பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

இதனிடையே இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபாகரனிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். பிரபாகரன் மீது உள்நோக்கம் கொண்டு தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று காலை சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபாகரனை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டார். ஈழப்பிரச்சனையால் ஆவேசம் : 
எம்.கே.நாராயணனுக்கு செருப்படி 
சென்னையில்  பரபரப்பு
 

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார்.

சென்னையிலிருந்து வெளியாகும் "த ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.

 அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.

அந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, "எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்" என்று கூறியபடியே அடித்தார்.  இதில் இரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்துள்ளன.
 இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்.
 
திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை ,  அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங் கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.
  
தாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.  தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்குள் அங்கு விரைந்த போலிசார் , பிரபாகரனைக் கைது செய்தனர்.  நாராயணனுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்

ad

ad