கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 27,000-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கனடாவில் இருக்கும் தன் மகனின் நிலை குறித்து நடிகர் விஜய் வருத்ததில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதில், விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் சஞ்சய்யால், இந்தியாவிற்கு திரும்பமுடியவில்லை, இதை நினைத்து விஜய் வருத்தத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து விஜய் தரப்பு கூறுகையில், கனடாவில் சஞ்சய் இருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். விஜய்யும் அவ்வப்போது மகனிடம் பேசி வருகிறார்.
ஆகையால், விஜய் கவலை என்று வெளியாகியுள்ள செய்திகளில் எல்லாம் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது