இதனை அடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மேரி கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்தார். தொடர்ந்து அவர், வயிற்றில் இருந்த குழந்தை அறுவைசிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ செய்தி தொடர்பாளர் இதுகுறித்து “ குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஆனால், மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.
மேரி அகியேவா அகியாபோங்
மேரியின் இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகிகள், அருமையான செவிலியரை இழந்துவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேரியின், கணவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது குடுபத்திற்கு நிதியளிக்க உடன்பணிபுரிபவர்கள், இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை அதில், £4,500 சேர்ந்துள்ளது