தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட முறைப்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த குழுவினர், சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் பல மாதங்களாகத் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செய்யப்பட்டுள்ளனர். கணினிகள், மதிப்பு மிக்க திறன்பேசிகள் மற்றும் பெருந்தொகை பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |