சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.