புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் - பாது­காப்பு அமைச்சு 

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வ­ருடன் உயி­ரோடு உள்ள புகைப்­ப­டங்கள் புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் என பாது­காப்பு அமைச்சு தெரி­விக்­கின்­றது.
சனல் 4 தொலைக்­காட்சி ஏற்­க­னவே இவ்­வா­றான பல புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்ள நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் பாது­காப்பு தரப்பு தொடர்ந்தும் ஆய்­வு­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ள நிலையில், இந்த புகைப்­ப­டங்கள் தொடர்­பிலும் அதில் கவனம் செலுத்­தப்­படும் என பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய குறிப்­பிட்டார்.
குறித்த தொலை­காட்­சி­யா­னது ஏற்­க­னவே பல புகைப்­ப­டங்­களை ஆத­ராங்கள் இன்றி போலி­யாக முன­வைத்­தி­ருந்­த­தா­கவும் அதன் தொடர்ச்­சி­யாக இதுவும் இருக்கும் என தாம் நம்­பு­வ­தா­கவும் விசா­ர­ணையின் இறு­தியில் உண்மை வெளிச்­சத்­துக்கு வரும் எனவும் இதன்போது அவர் சுட்­டிக்­காட்­டினார்.
போலி ஆவ­ணத்தை கொண்டு இரா­ணு­வத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான போலி புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது வெளி­யி­டப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய இவ்­வா­றான புகைப்­ப­டங்­களின் உண்மைத் தனமைக் குறித்து தொடர்ந்தும் சந்­தேகம் நில­வு­வ­தாக குறிப்­பிட்டார்.
ஏற்­க­னவே பாது­காப்பு தரப்பு சனல் 4 வீடியோ ஆத­ரங்­களை விஷேட ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அந்த ஆய்­வினுள் இந்த புகைப்­ப­டங்கள் தொடர்­பி­லான விட­யமும் உள்­ள­டங்­கி­யி­ருக்கும் என தான் நம்­பு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.
முன்­ன­தாக படை­யி­னரால் இசைப்பிரியா மீட்­கப்­பட்டு அழைத்து வரு­வது போன்ற காட்­சி­களை சனல் 4 வெளி­யிட்­டி­ருந்­தது. எனினும் இறு­தி­ யுத்­தத்தின் போது படை­யி­ன­ரு­ட­னான மோதலில் இசைப்
பிரியா கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.
இந் நிலை­யி­லேயே இசைப் பிரியா படை­யி­னரின் காவலரன் ஒன்றின் முன்னிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்துக்கு மேலதிகமாக மேலும் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்பட ஆதாரம் வெளியானது
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிக
வும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
எனினும் வழமைபோன்று இராணுவம் அதனை மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இனவழிப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அரசாங்கமும் இராணுவத்தரப்பும் என்ன பதில் சொல்லப் போகின்றனர்?

ad

ad