புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? கலைஞர் பதில்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி விவாதிக்கும் என்றார் கலைஞர்.


திமுக தலைவர் கலைஞர் 18.05.2014 ஞாயிற்றுக்கிழமை தனது கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் கலைஞரைச் சந்திக்க வந்த போது ஒரே கோஷமாக சத்தமிட்டதால், “என் வீட்டில் என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. நீங்கள் போடுகின்ற சத்தம் உள்ளே படுக்கையில் இருக்கும் என் மனைவிக்கு இடையூறாக இருக்கிறது. தயவுசெய்து சத்தம் போடாமல், விளக்கங்கள் கேட்பதாக இருந்தால் கேளுங்கள். கூச்சல் போடாதீர்கள் கலைஞர் என்று கேட்டுக் கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி :- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் தோல்விக்குப் பொறுப்பேற்று, பொருளாளர் தளபதி ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? 
கலைஞர் :- அது பொய்; கடைந்தெடுத்த பொய்! பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக என்னிடம் வந்து சொன்னார். 
கேள்வி :- மக்களவை தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு காரணம் என்ன? 
கலைஞர் :- வாக்குகள் குறைந்தது தான்! 
கேள்வி :- தோல்வி குறித்து ஆராய கழகத்தின் உயர்நிலைச் செயல் திட்டக்குழு கூடுகிறதா? 
கலைஞர் :- மிக விரைவில் தி.மு. கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூடி இதைப் பற்றி ஆய்வு செய்யும். 
கேள்வி :- தன்னை விலக்கியதால் தான் தி.மு.க. விற்கு தோல்வி ஏற்பட்டது என்பதைப் போல மு.க. அழகிரி சொல்லியிருக்கிறாரே? 
கலைஞர் :- அவரை நானும் தி.மு. கழகமும் மறந்து பல நாட்கள் ஆகின்றன. அவர் கழகத்தில் இருக்கும்போதே தி.மு. கழகம் இரண்டு மூன்று முறை படுதோல்வி அடைந்திருக்கிறது. 
கேள்வி :- தளபதி ராஜினாமா செய்ததை, ஒரு நாடகம் என்று அழகிரி கூறியிருக்கிறாரே? 
கலைஞர் :- அவரைப் பற்றி நான் இனியும் பேச விரும்பவில்லை. நான் முன்பே கூறியதைப் போல அவரை நான் மறந்து நீண்ட நாளாகிறது. 

ad

ad