புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2012


தயாநிதி எங்கே? : விசாரணைக்காக அழகிரியின் 2வது  மருமகனுக்கு சம்மன்
கிரானைட் முறைகேடு வழக்கில், தலைமறைவாக உள்ள, மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதியின் இருப்பிடம் குறித்து விசாரிக்க, அமெரிக்காவில் உள்ள அழகிரியின் மகள் அஞ்சுகசெல் வியின் கணவர் விவேக்கிற்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனம், விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாகவும், அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இவ்வழக்கில் தயாநிதி தலைமறைவாக உள்ளார்.  அவரது இருப்பிடம் குறித்து, உறவினர்களிடம் விசாரி த்த நிலையில், நேற்று முன் தினம் அழகிரி மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேஷிடம் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், அழகிரியின் மற்றொரு மகள் அஞ்சுக செல்வியின் கணவர் விவேக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சென்னையில் வசிக்கும் இவர், தற்போது அமெரிக்காவில் உள்ளார். இவரை, விசாரணைக்கு ஆஜராகும்படி, சென்னை முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஒருவாரத் தில் அவர் நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad