தயாநிதி எங்கே? : விசாரணைக்காக அழகிரியின் 2வது மருமகனுக்கு சம்மன்
கிரானைட் முறைகேடு வழக்கில், தலைமறைவாக உள்ள, மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதியின் இருப்பிடம் குறித்து விசாரிக்க, அமெரிக்காவில் உள்ள அழகிரியின் மகள் அஞ்சுகசெல் வியின் கணவர் விவேக்கிற்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இவ்வழக்கில் தயாநிதி தலைமறைவாக உள்ளார். அவரது இருப்பிடம் குறித்து, உறவினர்களிடம் விசாரி த்த நிலையில், நேற்று முன் தினம் அழகிரி மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேஷிடம் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், அழகிரியின் மற்றொரு மகள் அஞ்சுக செல்வியின் கணவர் விவேக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சென்னையில் வசிக்கும் இவர், தற்போது அமெரிக்காவில் உள்ளார். இவரை, விசாரணைக்கு ஆஜராகும்படி, சென்னை முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஒருவாரத் தில் அவர் நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.