புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2013

ஓடும் ரயிலில் வீரசாகசம் செய்த சிறுவன்: நிலை தடுமாறி விழுந்து பலி: சக பயணிகள் அதிர்ச்சி 


 

மும்பையில் போக்குவரத்துக்கு முக்கியமாக நம்பியிருப்பது மின்சார ரயில்கள்தான். இந்த ரயிலில் அலட்சமாக ஏறுவரும், இறங்குவதும் மும்பை வாசிகளுக்கு சாதாரணம். அதேபோல இளைஞர்கள் சாகசங்கள் செய்வதும் வாடிக்கையானதுதான். 
கடந்த ரம்ஜான் தினத்தன்று தானே ரயில் நிலையத்தில் சையத் என்ற 14 வயது சிறுவன், தனது நண்பர்பகளுடன் மும்பைக்கு சென்றுள்ளான். தனது சகோதரி திருமணத்திற்கு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளான். 
அப்போது வழக்கம்போலவே தான் பயணம் செய்யும் ரயிலில் சாகசம் செய்ய துவங்கியுள்ளான். ஒரு கையால் ரயிலில் உள்ள கைப்பிடியை பிடித்துக்கொண்டு, ஒரு கையையும், ஒரு காலையும் வெளியே நீட்டி தொங்கியப்படியே வந்துள்ளான். அப்போது பக்கவாட்டில் இருந்த மின்சார கம்பங்களையும் தொட்டுக்கொண்டு வந்துள்ளான். அவனது நண்பர்கள் போதும் வந்துவிடு என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் அவன் கேட்கவில்லை. 
ரயில் உச்சகட்ட வேகத்தில் சென்றது. அப்போது திடீரென நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தான். இதனை நேரில் பார்த்த அவனது நண்பர்களும், சக பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த காட்சியை ரயிலில் பயணம் செய்த ஒரு பயணி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த காட்சி மும்பை வாசிகளிடம் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad