புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை வைத்தியசாலைச்  சேர்ந்த மருத்துவ அதிகாரிக்கே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அளுத்கமை வன்முறையில் கொல்லப்பட்ட ஒருவரின் மருத்துவ அறிக்கையில், அவர் வெட்டுக்காயங்களால் மரணமானதாக குறித்த மருத்துவ அதிகாரியால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று சட்டத்தரணிகள் குறித்தவரின் உடலில் வெட்டு காயங்கள் அல்ல. துப்பாக்கி சூட்டுக்காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டனர். எனவே இறந்தவரின் உடலை மீண்டும் தோண்ட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இந்தநிலையில் நாளையதினம் குறித்த மருத்துவ அதிகாரிகயை விசாரணை செய்த பின்னர் உடலை தோண்டுவதற்கு களுத்துறை நீதிவான் தீர்மானித்துள்ளார்.
இந்த சந்தேகத்தை ஏற்கனவே இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெளியாரின் தலையீட்டால் மருத்துவர்கள் பிழையான வழியில் செயற்படுவதற்கு எதிராகவும் சட்டத்தரணிகள் பிறிதான வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ad

ad