புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை தேடி சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்ட விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற 153 இலங்கை தமிழ் அகதிகளும் இடைமறிக்கப்பட்டமை குறித்து அபோட்டின் அரசாங்கம் உறுதிப்படுத்தலையோ அல்லது மறுப்பையோ வெளியிடவி;ல்லை.
இந்தநிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வீடியோ மூலம் குறித்த படகு அகதிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் சிலர் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமையம், படகுகளை இடைமறிக்கும் போது சர்வதேச நியமங்கள் மற்றும் கடமைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று எச்சரித்துள்ளது.
சாதாரணமாக படகு ஒன்றை இடைமறிக்கும் நாடு அந்த படகை தமது கடல் எல்லைக்குள் வைத்தே இடைமறிக்கவேண்டும் என்ற அடிப்படை அகதிகள் நியமம் உள்ளமையை அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஒரு நாட்டில் இருந்து பயம் காரணமாக வெளியேறும் ஒருவர் மீண்டும் அந்த நாட்டுக்கு பலவந்தமாக அனுப்பப்படுகின்றமை சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் அமையம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad