புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர்


இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் 36 பேர் இன்று இலங்கை வந்துள்ளனர். 
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவே இவர்கள் இங்கு வந்துள்ளனர்.
(Asian Elections Monitoring Organization) ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்களான இக்குழுவினர், பல உலக நாடுகளில் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்ட அனுபவசாலிகள் என பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இன்று முதல் இவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad