புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

ஐ.நாவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம்கொடுக்க வேண்டும்; அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை செப்­டெம்பர் மாதம் வெளி­யி­ட­வுள்ள இலங்­கையின் யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான
அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சு­களை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்­டு­மென அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­ லாளர் ஜோன் கெரி­யிடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது போன்ற விட­யங்கள் குறித்தும் இப்­பேச்­சு­வார்த்­தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பய­ண­மாக நேற்றுக் காலை 8.00 மணி­ய­ளவில் இலங்கை வந்­த­டைந்த அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்­டோரை சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் கொழும்பு வந்­த­டைந்த ஜோன் கெரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட தலை­வர்­க­ளையும் ஏனைய சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்துப் பேச்சு நடத்­தினார்.

ad

ad