புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2019

சுவிசில் பிரபல வீடியோ நிறுவன தமிழருக்கு எதிராக கொலை வழக்கு ஆரம்பம்


சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் 29 வயதான இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 49 வயதான பிரபல வீடியோ நிறுவனஇலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர். மேலும் இந்த சம்பவத்தின் போது சந்தேகநபர், பொதுமக்கள் மீதும் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளன. எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் திகதி இன்னும் வெளியிடப்படவில்லை .

ad

ad