வட தமிழீழத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்
வடமாகாண கல்வி அமைச்ணின் கீழ் உள்ள படைமுகாம்களில் இருந்து விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காகவெனத் தெரிவித்தே குறித்த பாடசாலைகள் இவ்வாறு படையினரால் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு படையினரால் கோரப்பட்ட பாடசாலைகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 06 பாடசாலைகளும் , மன்னார் கல்வி வலயத்தில் 04 பாடசாலைகளும் , வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 03 பாடசாலைகளும் , கிளிநொச்சி 03 , மடு 01 , வவுனியா வடக்கு 02 , சாவகச்சேரி 03 பாடசாலைகளும் கோரப்பட்டுள்ளது.இதேபோன்று வடமராட்சியில் 10 பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதோடு தீவகம், வலிகாமம் கல்வி வலயங்களிலும் பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் செறிந்து வாழும் கோப்பாய் கல்வியற் கல்லூரியை இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்கான நிலையமாக தெரிவு செய்ததுடன் அதற்காண பணிகளில் இராணுவம் ஈடுபட்ட நிலையில் மக்களின் பலமான எதிர்ப்பபையடுத்து இராவம் அங்கிருந்து வெளியேறியிருப்பதம் குறிப்பிடத்தக்கது