புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2020

மினுவாங்கொடை, பேலியாகொடையில் இதுவரை 5,600 பேருக்கு கொரோனா!

Jaffna Editor
மினுவாங்கொடை மற்றும் பேலியாகொடை மீன் சந்தை கொத்தணிகளில் இதுவரையில் 5 ஆயிரத்து 600 பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணி குறித்து விசாரணை நடத்துவதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியில் எவ்வாறு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சட்டமா அதிபர், பதில் காவற்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ad

ad