புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2020

உள்ளிருப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்! _ பரிசின் வீதிகளில் குவிந்த மக்கள்

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உள்ளிருப்பு சட்டம் பரிஸ் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.
நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பாக (உள்ளிருப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர்) பரிசின் வீதிகளில் சில ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ”வெளியில் செல்ல அனுமதி இல்லை” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளமையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
“ஒவ்வொருவரும் உள்ளிருப்பை வெறுக்கின்றோம்!” என அவர்கள் கோஷமிட்டதோடு, “சுதந்திரம்” பறிபோகின்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்தோடு, வீதிகளில் இருந்த குப்பைத்தொட்டிகளை கொட்டி, உதைந்து வீழ்த்தி தங்களது கோபத்தினை வெளிப்படுத்தினர்.
காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர்

ad

ad