புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2021

கடுமையான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

www.pungudutivuswiss.com
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு கடுமையான அறிக்கையை வெளியிடுவார் என கூறப்படுகிறது.


ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு கடுமையான அறிக்கையை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

ஜெனீவா அமர்வுக்கு முன்னதாக இந்த அறிக்கையின் நகல் வெளியிடப்படும். அறிக்கையின் நகல் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அதன் பதில் உரிமைக்காக இலங்கை அரசுக்கு குறித்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

குறித்த அறிக்கையின் நகலை இலங்கை பெற்றிருப்பதை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், நேற்று வரை இந்த அறிக்கைக்கு இலங்கை தனது பதிலை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கை உள்ளது. குறித்த அமர்வின் போது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் தோல்வி குறித்து மிச்சேல் பச்லெட் விமர்சனங்களை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad