புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2021

55 தொகுதிகளில் கடும் போட்டி: நாம் தமிழர் கட்சிதான் அதிமுகவின்வெற்றியை தடுத்ததா

www.pungudutivuswiss.com
திமுகவின் அலையை தடுத்து நிறுத்தியதா நாம் தமிழர் கட்சி..?நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான வாக்குகள் திமுக வாக்குகளா அதிமுக வாக்குகளா .நாம் தமிழர் 90 சதவீதமாக திமுகவையே கூறி வைத்து பிரசாரம் செய்தது .அதனால் அதிமுகவின் வாக்குகள் தான் நாம் தமிழருக்கு கிடைதிருக்க வேண்டும் என அறிய முடிகிறது திமுகவும் அதிமுகவும் கடும் போட்டியில் தான் இருந்திருக்க வேண்டும் .
தமிழகத்தில் திமுக எளிதாக வெற்றிபெறவேண்டிய சுமார் 50 தொகுதிகளில், அக்கட்சியை திக்கித்திணற வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. அதுபற்றிய அலசல்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததனால் எழும் இயல்பான ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் அதிமுகவின் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதாவும் இல்லாததால் நிச்சயமாக 200 தொகுதிகளுக்கும் மேலாக எளிதாக வெல்லாம் என்று திமுக கணக்கு போட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பல கூட்டங்களில் திமுக நிச்சயமாக குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறிவந்தார். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றிலும் திமுக 180 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றிபெறும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளில் திமுக 159 தொகுதிகளிலும், அதிமுக 75 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

image




இத்தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் திக்கிதிணறி வெற்றிபெற்றது, மேலும் அதிமுக கூட்டணியிடம் 5 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் 15 தொகுதிகளை திமுக பறிகொடுத்தது. மேலும் 10 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் அதிமுகவிடம், திமுக 10 தொகுதிகளை இழந்துள்ளது, இந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 10 முதல் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் திமுகவுக்கு சென்றிருந்தால் நிச்சயமாக இன்னும் 25 முதல் 35 இடங்களை திமுக எளிதாக கைப்பற்றியிருக்கும்.

தமிழகத்தில் 35 தொகுதிகளில் 5 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் திமுக, அதிமுக கூட்டணிகள் வெற்றி பெற்றுள்ளது, இதில் 9 தொகுதிகளில் வெறும் ஆயிரம் வாக்குகளில் வெற்றி, தோல்வி மாறியிருக்கிறது. தி நகரில் வெறும் 137 வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்றிருக்கிறார். இதுபோல மொடக்குறிச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோற்றுள்ளார், தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வென்றுள்ளார், திமுகவின் முக்கிய தலைவரான துரை முருகன் 746 வாக்குகளில்தான் காட்பாடியில் வெற்றிபெற்றார், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் 393 வாக்குகளில் திமுகவிடம் தோல்வியடைந்தார். மேலும் மேட்டூர் பாமக வேட்பாளர் சதாசிவம் 656 வாக்குகள் , கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள், விருத்தாச்சலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 862 வாக்குகள், நெய்வேலி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றனர். இந்த தொகுதிகள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் அதிமுக-அமமுக பிரிவு காரணமாக எளிதாக அதிக இடங்களில் வெல்லும் திமுகவின் நிலையை, நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் சற்று அசைத்து பார்த்துள்ளது. மூன்றாவது அணிக்கான போட்டியில் இருந்த அமமுக தென்மாவட்டங்களில் சில தொகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் சென்னை, கோவை மற்றும் சில நகரங்களில் மட்டும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக 10 முதல் 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளனர். கிராமங்கள், நகரங்கள் பேதமின்றி நாம் தமிழர் கட்சிக்கு சராசரியாக அனைத்து பகுதிகளிலும், அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகள் பதிவாகியிருப்பது கவனிக்கத்தக்கது

ad

ad