புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2025

தமிழ் எம்.பி ,ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் தரப்பின் இராணுவ பிரிவை தேடும் புலனாய்வுத் துறை
பிள்ளையான் தரப்பின் இராணுவ பிரிவை தேடும் புலனாய்வுத் துறை
ஜனாதிபதி நிதியம்
2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் அண்மையில் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில் | Order Issued Court Rajitha Keheliya Dayasiri


இதற்கமைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளதாக நளிந்த கூறியுள்ளார்.

மேலும், ஜகத் குமார 10 இலட்சம் ரூபா, குமாரசிறி 9 இலட்சம், ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம், நாமல் குணரத்ன 10 இலட்சம், தர்மசிறி பண்டா 10 இலட்சம், விதுர விக்கிரமநாயக்க 15 இலட்சம், விமலதீர திசாநாயக்க 30 இலட்சம், லகி ஜயவீர 16 இலட்சம், இராமலிங்கம் சந்திரசேகரன் 14 இலட்சம், ஜோன் அமரதுங்க 40 இலட்சம் என்ற அடிப்படையில் நிதி பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபா, கெஹெலிய ரம்புக்வெல்ல 110 இலட்சம் ரூபா, டி. மு ஜயரத்ன 300 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

இலங்கை தொடர்பில் ஆராய உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு
இலங்கை தொடர்பில் ஆராய உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு
முன்னாள் ஜனாதிபதிகள்
மேலும் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபகச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலப்பகுதிகளிலே இந்த ஜனாதிபதி நிதியத்தின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில் | Order Issued Court Rajitha Keheliya Dayasiri

இந்நிலையில் ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கமை இந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோத

ad

ad