அமர்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை
ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில்
நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில்
சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன்.
பால்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின்
வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில்
நடந்துகொண்டிருக்கிறது.