புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2013


கமல் நல்ல கலைஞன்: அவனை காயப்படுத்தி
அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்:  பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை, கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.

கமலுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரா. பார்த்திபன் 
முஸ்லீம்களுக்கு எதிரான படம் என்று கமல் நடித்துள்ள விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து நடிகர் ரா.பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை;

புதிய கூட்டணி  : தேமுதிக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
 நேற்று தே.மு.தி.க. பொதுக்குழு கூடியது.  கூட்டத்தில் மா.பா. பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முக்கியமான தேர்தல். இதில் நம் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல்

பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதை ஏற்க மறுப்பு!
பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.


 டெல்லி : 12-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்து கொலை
டெல்லியில் கடந்த மாதம் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், டெல்லி அருகில்

இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு

இலங்கையில் நடைபெறும்  கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்–இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்

பத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகை ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது
இந்திய அரசின் பத்ம விருதுகள் வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன.

மட்டக்களப்பில் மீண்டும் வெள்ள அபாயம்! 690 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேர் இடம்பெயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை வீழ்ச்சி காரணமாக உறுகாமம்ää உன்னிச்சை குளங்கள் நிரம்பி வழிந்ததாலும்ää இக்குளம் திறக்கப்பட்டதாலும் மாவட்டத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கியது. 

பயணி ஒருவரால் சென்னை விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியிலிருந்து ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து சென்ற பயணி ஒருவரே தனது பயணப் பொதியை சுங்க அதிகாரிகளுக்குப் பயந்து விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

16 வது பிறந்த நாள் வாழ்த்து 


மதுஷன் 
______________________________________________

18 வது பிறந்த நாள் வாழ்த்து  

   
  திலக்சன் 

26.01.2013
சுவிட்சர்லாந்த் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் வீரர்களான திலக்சன் தவச்செல்வம் தனது பதினெட்டாவது பிறந்த நாளையும் ,மதுசன் ஜெயபாலன் தனது பதினாறாவது பிறந்த நாளையும் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.. இந்த இளம் நட்ச்சத்திரங்களை யங் ஸ்டார் கழகம் இறைவன் அருளால் பல்கலையும் பெற்று இன்று போல என்றும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறது 


25 ஜன., 2013

புங்குடுதீவு மண்ணின் மத்தியில் கம்பீரமாக எழுந்தருளி எமக்கு ஆசீர்வதிக்கும் புனித சவேரியார் தேவாலயத்தின் அழகு கோலம் கண்டு வியப்படைவீர்கள்.ஐரோப்பிய மண்ணில் உள்ளது போன்ற அற்புதமான  கட்டமைப்பு 

காஞ்சீபுரத்துக்குள் ராமதாஸ் நுழைய தடை விதிக்க
வேண்டும்: வக்கீல்கள் மனு


காஞ்சீபுரம் மாவட்ட வக்கீல்கள் ஜனகன், அம்புரோஸ், மாரிமுத்து, பாரதி உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் சித்ரசேனை சந்தித்து மனு அளித்தனர். 

தனது மகளை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது: கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சியில் 15 வயது சிறுமியொருவர், அவரது சிறிய தந்தையால் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.


4ஆம் தேதி ‘டெசோ’ கூட்டத்தில் முக்கிய முடிவெடுப்போம்! கி.வீரமணி அறிக்கை!
இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட, தமிழர்கள்
 நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாரு‌டைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.
பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. 
யாழ்/மருதனார்மடத்தில் வெகு அண்மையில் புதிதாக நிறுவப்பட்ட 72 அடி உயரமான ஆஞ்சநேயர் சுவாமி - இலங்கையில் மிக உயரமான சிலை



பிரபல தமிழ் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசாமி கைது! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில்

முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டபீட மாணவியின் கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள்: பெற்றோர் கவலை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும்  மாணவி தனது வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக சென்ற மாணவியின் கை அகற்றப்பட்டுள்ளதாக அவரது தந்தையும் சகோதரனும்

பணத்துடன் காணாமல் போயுள்ள மனைவியைத் தேடும் கனடாவில் இருந்த வந்த கணவர்! வடமராட்சியில் சம்பவம்
வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ad

ad