புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2013


பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதை ஏற்க மறுப்பு!
பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.
மத்திய அரசு நேற்று எஸ்.ஜானகிக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவித்தது.


இந்த விருதை பெற ஜானகி மறுத்துவிட்டார்.
 இதுகுறித்து ஜானகி, ‘’பத்மபூஷண் விருதை ஏற்க நான் விரும் பவில்லை. தென் இந்திய கலைஞர்கள் புறக்கணிக் கப்படு கின்றனர்.

வட இந்தியர்களுக்குதான் இவ்விருதுகள் அதிகம் வழங்கப்ப டுகின்றன. என்னை நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விரு துக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள். எனவேதான் பத்ம பூஷண் விருதை வாங்குவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்

ad

ad