புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013


தனது மகளை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது: கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சியில் 15 வயது சிறுமியொருவர், அவரது சிறிய தந்தையால் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகையில்,
வட்டகச்சிப் பிரதேசத்தில் 15 வயது நிரம்பிய குறித்த சிறுமியை, 40 வயதுடைய சிறிய தந்தை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். கர்ப்பத்தைக் கலைப்பதற்காக சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதே குறித்த நபரை கிளிநொச்சிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ad

ad