புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2013


மட்டக்களப்பில் மீண்டும் வெள்ள அபாயம்! 690 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேர் இடம்பெயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை வீழ்ச்சி காரணமாக உறுகாமம்ää உன்னிச்சை குளங்கள் நிரம்பி வழிந்ததாலும்ää இக்குளம் திறக்கப்பட்டதாலும் மாவட்டத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கியது. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 முகாம்களில் 690 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேர் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். 3116 பேர் உறவினர் வீடுகளில் வாழ்கின்றனர்.
கிரான் மகா வித்தியாலயம், கிரான் கிறிஸ்தவ தேவாலயம், பறங்கியாமடு பாரதி வித்தியாலயம், பாலையடித்தேனா ஸ்ரீ முருகன் வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம், கொடுவாமடு கண்ணகி வித்தியாலயம், சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம், சித்தாண்டி இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம், வேத்துச்சேனை பாடசாலை, றாணமடு வித்தியாலயம் போன்ற இடங்களில் இடைத்தங்கல் முகாம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வகையில் மயிலம்பாவெளி, தன்னாமுனை, ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான், கிண்ணையடி, கண்ணகிபுரம், கறுவாக்கேணி, மீறாவோடை, புதுக்குடியிருப்பு, விநாயகபுரம் உட்பட்ட பல பகுதிகளுக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ. யோகேஸ்வரன் சென்று மக்களின் நிலமையை பார்வையிட்டதுடன், தேவைப்படும் அவசிய உதவிகளையும் உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி வைத்தார்.
அதுமட்டுமல்லாது தேவைப்படும் உதவிகளை பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள் மூலம் மக்களுக்கு உடன் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் இணைத் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் வேட்பாளருமான கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அனர்த்த சேவை உறுப்பினர்களான த.சந்திரகுமார், கி.தேவகுமார் மற்றும் பேரவையின் பிரதி நிதிகளும் சமூகம் கொடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சில பகுதிகள் பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ளதாலும், மேலும் தொடர் மழையாலும் குளங்களின் நீர் திறக்கப்படுவதாலும் பல பகுதிகள் நீரில் மூழ்கக்கூடிய சூழல் உள்ளதாலும் இம்மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் உதவிகளை வழங்கும் முகமாக இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்.

உதவி செய்ய விரும்பும் அமைப்பு அல்லது தனி நபர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரில் தங்களது ஆதரவை வழங்கலாம் என்பதையும் தெரிவிக்கின்றார்.
வழங்கப்படும் உதவிகளுக்கு பற்றுச்சீட்டு மற்றும் நன்றி நவிலல் கடிதம், உதவி வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் (புகைப்படங்கள்) உட்பட்டவை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன் தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கீழ்வரும் தொடர்புகளை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.

தொலைபேசி இலக்கம் :  0094652228273 0094652228018 0094776034559 0094653656608
தொலைநகல் இலக்கம் :  0094652228273
மின்னஞ்சல் முகவரி : btdymha@gmail.com / yoheswaran.mp@gmail.com
வங்கி சார்பான தகவல் : மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் (Federation of Young Men’s Hindu Association) என்ற பெயரில், மட்டக்களப்பு கொமர்ஷினல் வங்கி (Commercial Bank) கணக்கு இலக்கம் 1105040264. SWIFT CODE: CCEYLKLX, Bank Code : 7056-105 இதில் பணங்களை அனுப்பிவைக்கலாம். அத்தோடு உதவி வழங்குபவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தல் அவசியமானதாகும்.

ad

ad