-
28 நவ., 2013
27 நவ., 2013
மாவீரர் நாளினை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் உதயன் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் மற்றும் உதயன் நிறுவனம் சார்பில் எஸ்.அனுராஜ் ஆகியோர் மரங்களை நாட்டி வைத்தனர்.
நன்றி : உதயன்
நன்றி : உதயன்
உரிமைகளுக்காக உயிர் நீத்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய யோகேஸ்வரன் எம்.பி
போரின் போது உரிமைகளுக்காக போராடிய தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அஞ்சலி செலுத்தியது.நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக மூன்று பெரும் பரிமாணங்களில் செயலாற்ற உறுதி கொள்வோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
விடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாளில் விடுதலையினை வென்றெடுக்க மூன்று பெரும் பரிமாணங்களில் நாம் அனைவரும் செயலாற்ற உறுதி கொள்வோம்
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் இன்றும்(26) நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!
வடமரட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விவசாய கடன் போன்ற கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமைக்கு பிரதி உபகாரமாக பயனாளி யுவதிகளிடம் இருந்து இவர் செக்ஸ் இலஞ்சம் பெற்று வருகின்றார் என்பதற்கு புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடனான ஆதாரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக சூழல் இராணுவத்தால் முற்றுகை! பொலிஸ் குவித்து ரோந்து பணிகள் தீவிரம்!- கடும் பதற்றத்தில் மக்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனைகளுகம் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
ஈபிடிபியின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சீன் மரணம்
வாயில் இரத்தம் வெளியிட்ட நிலையில் அவர் மரணமானதாக ஈபிடிபி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானியேலின் சடலம் தற்போது புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை: சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த
மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி போடும் பிச்சை அல்ல! அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.
மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா
சுவிஸின் பாசல் கழகம் பலம் மிக்க செல்சீயை இரண்டாவது முறையாகவும் வென்று சாதனை
இன்றைய பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா அடித்த அற்புதமான கோலின் முன்னே சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது
இன்றைய பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா அடித்த அற்புதமான கோலின் முன்னே சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)