புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2013

குழந்தையைப் பெற்று உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு: வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் மண்ணுக்குள் புதைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சவூதியில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட மனைவி: மொனராகலையில் கணவன் உண்ணாவிரதம்
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்ட தனது மனைவி அங்கு விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து மொனராகலையில் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தர்மபுரியில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இளவரசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்து இருந்தார். 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனைக் கணக்கில் வைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கணக்கில் கொண்டும் அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியரே முடிவு செய்யலாம் என்று  உத்தரவிட்டிருந்தது. 
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.  மாவட்டத்தில் 144 தடை அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு: எய்ம்ஸ் டாக்டர் குப்தா
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளவரசனின் உடல் மறுபரிசோதனை செய்யப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபரிசோதனை செய்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் பரத்வாஜ், கபிர்குமார், குப்தா, மேலோடெபின் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மறுபரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது என்று டாக்டர் குப்தா தெரிவித்தார். மறுபரிசோதனை அறிக்கையை சீல் வைத்து உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் துணைத் தூதரகம் தாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்தாகவும், சென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து இலங்கை துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடையை மீறி கலந்து கொள்வது பற்றி ஆலோசனை! தடை உத்தரவை வாங்கிய பின் திருமா பேட்டி!
தருமபுரி மாவட்டத்தில் நுழைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டிருந்தார்
இழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்! நாட்டை துண்டாடாமல் நட்புடன் வாழுங்கள்!- ஜனாதிபதி
துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து தமிழ் பேசும் வறிய மக்களை அகற்றும் நடவடிக்கை: கோத்தபாயவிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு
கொழும்பில் வசிக்கும் தமிழ் பேசும் வறிய மக்களின் குடியிருப்புகளை அகற்றி, அவர்களை கொழும்புக்கு வெளியே அனுப்பும் கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.
அரசின் தேர்தல் வியூகம்: வடக்கில் 335 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனங்கள்! 28 சிங்களவர்களும் உள்ளடக்கம்- அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு
வடமாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 28 சிங்களவர்கள் உட்பட்ட 335 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் அவசரமாக நியமனங்களை வழங்கியுள்ளது.
97 பேருடன் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களின் படகு மூழ்கியது! 88 பேர் மீட்பு! குழந்தை ஒன்று பலி
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இலங்கையர்கள் உட்பட்ட 97 பேருடன் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. இதில் 88 பேர் காப்பாற்றப்பட்டனர். மீட்பாளர்களால் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ad

ad