1964 - ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினைச் சகோதரர்
நாவேந்தனின் ''வாழ்வு" சிறுகதைத் தொகுதி பெற்றது.
அந்த ஆண்டில் அவர் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் இலக்கியச் சுற்றுப்பயணம் சென்றார்.
அக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இலக்கியப் பிரதிநிதியாகவும் அவர் விளங்கியதால் அங்கெல்லாம் பல நண்பர்கள் இருந்தார்கள்..!
அவ்வேளை மட்டக்களப்பில் நண்பர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட படம் இதுவென நினைக்கிறேன்..!
மட்டக்களப்பில் எம். எஸ். பாலு மாஸ்ரர் என்ற நண்பருடன் தங்கியிருந்ததாக ஒருமுறை அவர் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இப்படத்தில் அவருடன் காணப்படும் நண்பர் குடும்பம் யாரென எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் அறியத்தந்தால் நன்று..!!