புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012


கல்கிஸ்ஸ கடலில் நீந்தச் சென்ற பிரான்ஸ் பிரஜை உள்ளிட்ட 4 பேரைக் காணவில்லை
கல்கிஸ்ஸ கடலில் நீந்தச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை உள்ளிட்ட நால்வரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முற்பகல் இந்தக் குழுவினர் கடலுக்கு சென்றதாகவும் பிற்பகல் 1.30 அளவில் திரும்ப வேண்டியிருந்த போதிலும் இதுவரையில் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸ்ஸ கரையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நால்வரும் கடலில் நீந்தச் சென்றுள்ளனர். குறித்த காலத்திற்குள் அவர்கள் மீள திரும்பாமையை அடுத்தே தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை தேடும் படையில் கடற்படையின் சுழியோடிகளும், விசேட படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தனியார் ஒன்று சார்பில் சுழியோடல் பணிக்காக நேற்று மதியம் கல்கிசை கடற்கரையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிற்கு சென்று சுழியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரான்ஸ் பிரஜை உள்ளிட்ட நால்வரும் கடலுக்கு சென்ற படகை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ad

ad