புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2013


புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள்!இன்னொரு போராளிக்குழு உருவாகும்?-சந்திரிகா குமாரதுங்க

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியேதொடர்ந்து நடக்குமேயானால்இன்னும் சில ஆண்டுகளில்இன்னொரு போராளிக்குழுஉருவாகும் என்றுசிறிலங்காவின்முன்னாள்ஜனாதிபதிசந்திரிகாகுமாரதுங்கஎச்சரித்துள்ளார்.

அடிப்படைவாதபோகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால்பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவின் தலைநகர் லாகோசில்இருந்து வெளியாகும், AYO OKULAJA இதழுக்குவழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.
அவரது செவ்வியின் சில பகுதிகள் வருமாறு
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின்தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரியவிவகாரமாக உள்ளது.
.நா மனிதஉரிமைகள் பேரவை அதை இன்னமும்விசாரித்துக் கொண்டிருக்கிறது.
நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும்,வேறொரு போரில் ஒரு நீண்டகால கடிவாளமாக இருக்கக்கூடும் என்றே நான் இன்னமும் நம்புகிறேன்.
தமிழ்மக்கள் நீண்டகாலமாகவே பாரபட்சமாகநடத்தப்பட்டார்கள்அவர்கள் தமது உரிமைகளைக்கோரினார்கள்.
அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளைநிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாகஇணங்கியது.
முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமஸ்டி ஆட்சியைநிறுவ இணங்கப்பட்டது.
ஆனால்ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில்நம்பிக்கை கொண்டவரல்ல.
அவர் ஒருவரே எனது அமைச்சரவையில் பேச்சுக்களுக்குஎதிராக இருந்தார்அவரது தேவை அவர்களை கொல்லவேண்டும் என்பதாகவே இருந்தது.
இப்போது ஒட்டுமொத்த உலகமுமேஇராணுவத்தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள்.தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள்.
சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியேதொடர்ந்து நடக்குமானால்இன்னும் சில ஆண்டுகளில்இன்னொரு போராளிக்குழு உருவாகும்.
இறுதித் தாக்குதலின் போது பொதுமக்களின்மனிதஉரிமைகள் அவர்களால் மீறப்பட்ட சம்பவங்கள்நிறையவே இடம்பெற்றன.

ஏனென்றால்புலிகள் தம்மைச் சுற்றி பொதுமக்களைவைத்திருந்தார்கள்.

பொதுமக்களை சுட்டுவிழுத்த சிறிலங்கா அரசாங்கம் ஜெட்போர் விமானங்களையும் பயன்படுத்தியது.

சிறிலங்கா அரசாங்கம் அதிகளவு மனிதாபிமானஅணுகுமுறையில் செயற்பட்டிருந்தால்இந்தக்கொலைகளைத் தவிர்த்திருக்கலாம்.

பொதுமக்களைக் கொல்லவேண்டிய தேவைஇருக்கவில்லைஇதனால் என்ன நடந்திருக்கிறது,எல்லோரும் கோபமுற்றிருக்கிறார்கள்.

தனியே தமிழ்ப்புலிகளை மட்டும் அழித்திருந்தால்யாரும்கவலைப்பட்டிருக்கமாட்டார்கள்.

ஏனென்றால் அவர்கள் கொடூரமானவர்களாக இருந்தனர்.

அல்கெய்தாவுக்கு முன்னர்உலகிலேயே மிகப்பெரியஎண்ணிக்கையில் தற்கொலைக் குண்டுதாரிகளைஅவர்களே உருவாக்கினார்கள்.

மக்கள் வன்முறைகளை விரும்பமாட்டார்கள்.வன்முறைகளுக்கு மிகஆழமான காரணங்கள்இருக்கின்றன.

எனவே முரண்பாடுகளுக்கான அந்தக் காரணங்களைக்கண்டறிய வேண்டும்அந்தக் காரணங்களை தீர்க்கவேண்டும்.

அடிப்படைக் காரணங்களை கண்டுபிடிக்கும் வரை நிறுத்தக்கூடாது.

போகோ ஹராம் ஏழைகளை ஆட்சேர்ப்புச் செய்கிறது.அவர்கள் பாரபட்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே முதலில் நீங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினைவறுமைஅவர்களை உள்ளடக்கிய ஒரு கொள்கையைஉருவாக்க வேண்டும்.

வம்ச அரசியல் முறையை நான் ஏற்கவில்லைஎனதுபிள்ளைகளை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை.

எனது தந்தையும்தாயும் அரசியலில் இருந்தனர்எனதுதந்தை படுகொலை செய்யப்பட்ட பின்னர்அரசியலுக்கு வரஎனது தாயார் மறுத்து விட்டார்.

ஆனால் கட்சி அவரை வருமாறு கேட்டதுஇதனால் நாம்ஆட்சியில் இருக்க வேண்டியதாகி விட்டது.

பின்னர் எனது தாய் மிகவும் புகழ் பெற்றார்அவர் தனதுபணியை சரியாகச் செய்தார் என்று நான் நினைக்கிறேன்.

அவருக்குப் பின்னர் கட்சிக்கு இன்னொரு தலைவர்தேவைப்பட்டார்.

எனக்கு அரசியல் தேவையில்லை என்று நான் கூறினேன்.நான் மறுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்அதற்குள்நான் இழுத்து வரப்பட்டேன்.

அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்றுகூறினேன்எனக்குப் பிள்ளைகள் இருக்கின்ற போதிலும்,அவர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்பவில்லை.

வம்ச அரசியல் நல்லதல்ல என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் தமக்காக அபகரிக்க ஒரு குடும்பத்துக்குஅது இடமளிக்கிறது.

அந்த முறையில் ஊழல்கள் மோசமாக உள்ளது.சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மிகப் பெரியஊழல்களை செய்துள்ளார்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அரசாங்கப்பதவிகளில் உள்ளனர்நான்கு சகோதரர்கள்அமைச்சரவையில் உள்ளனர்.

அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.இந்தமுறையில் உள்ள நன்மைகளை விட தீமைகளேஅதிகம்.

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எப்படி உயிர்பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது.

ஆனால் அது ஒரு அதிசயம்நான் எனது ஒரு கண்ணைஇழந்தேன்எனக்கு இடது கண்ணில் பார்வை இல்லை.

எனது மூளையில் இப்போதும் ஒரு இரும்புத்துண்டு உள்ளது.அந்தத் தாக்குதலில் எனது சாரதி உள்ளிட்ட 26 பேர்கொல்லப்பட்டனர்.

ad

ad